அமெரிக்காவில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு.!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. துப்பாக்கி வன்முறை காப்பக இணையதளத்தின்படி, கடந்த ஆண்டில் மட்டும் பொதுவெளியில் 647 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளது.

அந்தவகையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல் அமெரிக்காவில் சிறுபான்மையின மக்களான இந்தியர்கள், சீனர்கள், பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட ஆசிய மக்களின் மீதான வன்முறை தற்போது அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்த காலத்தில், சிறுபான்மையின மக்கள் மீதான வெறுப்பு நேரடியாக காட்டப்பட்டது.

தற்போதும் அது தொடர்ந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சீனா மற்றும் வியட்நாமில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பங்கள், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஆசிய நகரத்தில், சந்திர புத்தாண்டைக் கொண்டாடினர்.

சனிக்கிழமை இரவு 10 மணிக்குப் பிறகு (இந்திய நேரப்படி காலை 6 மணி) மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் இடத்தில் திடிரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. முன்னதாக திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கிருந்த மான்டேரி பூங்காவில் மர்மநபர் ஒருவர் பொதுமக்களைப் பார்த்து சுடத் தொடங்கினார். துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

ஆசிய மக்கள் மீதான அமெரிக்கர்களின் வெறுப்பின் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக சர்ச்சைகள் எழுந்தது. அதைத் தொடர்ந்து மர்மநபரை தீவிரமாக தேடி வந்த போலீசார், அவரை கண்டுபிடித்தனர்.

ஹூ கேன் டிரான் எனும் 72 வயதான நபர், சீன சந்திர புத்தாண்டு விழாவில் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை வேனில் வழிமறித்து சுற்றி வளைத்தனர். அதிகாரிகள் வாகனத்தை நெருங்கும் போது அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வேறு சந்தேக நபர்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய அதிகாரிகள், தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் அறியப்படவில்லை என்றும், விசாரணை இன்னும் தொடர்கிறது என்றும் கூறினர். உயிரிழந்த சீன மக்களுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள பொதுகட்டிடங்களில் உள்ள தேசிய கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவமாக, அமெரிக்காவில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. ஜார்ஜியாவில் முகமூடி அணிந்த மூன்று நபர்களால் 52 வயதான இந்திய-அமெரிக்க நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி மற்றும் மகள் காயமடைந்தனர். ஜனவரி 20 ஆம் தேதி ஜார்ஜியாவின் ஹார்ட்லி பிரிட்ஜ் சாலைக்கு அருகில் உள்ள தோரோப்ரெட் லேனில் இந்த சம்பவம் நடந்தது.

பணிமனை திறப்பு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு….!

பினால் படேலும் அவரது குடும்பத்தினரும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, முகமூடி அணிந்த மூன்று நபர்கள் துப்பாக்கியுடன் எதிர்கொண்டதாக பிப் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

சீன மக்கள் தொகையில் 80% பேருக்கு கொரோனா; உலகநாடுகள் பீதி.!

ஞாயிற்றுக்கிழமை சிகாகோவில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தின் போது 23 வயதான இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தெற்குப் பகுதியில் உள்ள பிரின்ஸ்டன் பூங்காவில் தேவ்சிஷ் நந்தேபு சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது நண்பர் கே சாய் சரண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.