சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் திருவட்டார் அருகேவுள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர் வீட்டில் இருந்தவாறு சிக்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.