ஜெயலலிதாவின் நகைகள், சேலைகள், செருப்புகளை ஏலம் விட நடவடிக்கை – பெங்களூரு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள் மற்றும் சால்வைகளை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், நகைகள், செருப்புகள், சேலைகள் கடந்த 27 வருடங்களாக கர்நாடக கருவூலத்தில் உள்ளன.

அவற்றை ஏலம் விடுவது தொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராமச்சந்திர டி.ஹுத்தார், கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை உடனடியாக சிறப்பு வழக்கறிஞரை நியமித்து அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.