மக்களே, சரியாக திட்டமிட்டுக்கோங்க.. நாளை முதல் 5 நாள் வங்கிகள் செயல்படாது..!

நாளை முதல் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப போதுமான முன்னேற்பாட்டுடன் தங்கள் நிதி பரிமாற்றங்களை சரியாக திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா மற்றும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக நாளை முதல் வங்கிகள் இடையில் ஒருநாள் வெள்ளிக் கிழமை தவிர ஐந்து நாட்களுக்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஜன.30-ம் தேதி (திங்கள்) மற்றும் 31-ம் தேதி (செவ்வாய்) ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அந்த இரண்டு நாட்களும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுதவிர குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு நாளை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜன.28-ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதாலும், அன்றைய தினமும், மறுநாள் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாளாகும்.

அதனால் இந்த ஐந்து தினங்களும் வங்கிகள் இயங்காது. இடையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் வங்கிகள் செயல்படும். வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாததால் வங்கிச்சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற நிலையில் பொதுமக்கள் தங்கள் நிதி சார்ந்த செயல்பாடுகளை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.