வாஷிங்டன் : பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

யக்கிமா நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நுழைந்த ஆயுதமேந்திய மர்மநபர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அலறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர்.

தகவலறிந்த போலீசார், துப்பாக்கிக்சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அப்பகுதியினை சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.