திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயர்ந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூர் கிராமத்திலிருந்து சென்னை வேளச்சேரிக்கு திருமணத்திற்காக வேன் ஒன்றில் 20க்கும் மேற்பட்டோர் திருமணத்திற்காக சென்றுள்ளனர்.
அப்போது மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து வேன் தலை குப்புற விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கொடூர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.