புளியமரத்தில் தலைகீழாக தொங்கிய வழக்கறிஞர்.. காரணம் என்ன தெரியுமா..?

தூத்துக்குடி அருகே, கந்துவட்டி கொடுமையைக் கண்டித்து வழக்கறிஞர் ஒருவர் புளியமரத்தில் தலைகீழாக தொங்கி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் அய்யலுசாமி. வழக்கறிஞரான இவர் காங்கிரசின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் அய்யலுச்சாமி, கயத்தாறு தாலுகா மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கந்து வட்டியால் பெரும்பாலான குடும்பங்கள் பலியாகும் சம்பவங்களை கணக்கில் எடுக்கப்படவேண்டும்.

மேலும், கந்துவட்டி சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வினோத ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தார்.

இதையடுத்து, கடம்பூர் காட்டுப்பகுதியில் உள்ள புளியமரத்தில் வழக்கறிஞர் அய்யலுசாமி தனது காலில் கயிறு கட்டி தலைகீழாக தொங்கி சுமார் 1 மணி நேரம் ஆர்பாட்டம் நடத்தினார். அப்போது தனது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.