ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால், பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி20 மாநாடு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர உள்ளனர்.
எனவே, பாதுகாப்பு நலன் கருதி பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.