பொருளாதார நெருக்கடிக்கு அல்லாவே காரணம்; பாகிஸ்தான் நிதி அமைச்சர்.!

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்பு பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற ஷாபாஸ் ஷெரீஃப் அரசுக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மிகப்பெரிய சோதனையாக உள்ளது என்றார்.

இம்ரான் கான் தலைமையிலான அரசு பொருளாதாரத்தை முறையாகக் கையாளவில்லை என்றும் மீண்டும் பழைய நிலைக்கே பொருளாதாரத்தைக் கொண்டு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்திருந்தார்.

அதேபோல் பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுக்க இருந்த 600 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் பெறும் நோக்கில் கடந்த வாரம் பாகிஸ்தான் அமைச்சரவை 4,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பட்ஜெட்டை வகுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அரசுக்கு வழங்குவதாக இருந்த தொகை 2019ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் எவ்வாறு அந்த பணத்தை திரும்ப செலுத்தும் என்று கேள்விகள் எழுந்த பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்டது.

பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது.

பாகிஸ்தான் மின்சார துறையின் கடன் கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி ரூ.2.253 லட்சம் கோடியாக (பாக். மதிப்பில்) இருந்தது. இது, தற்போது ரூ.2.437 லட்சம் கோடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் மின்சார பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.

அந்தவகையில் கடந்த 23ம் தேதி பாகிஸ்தானில் பல்வேறு நகரங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இது பற்றி அந்நாட்டின் மின் துறைக்கான செய்தித் தொடர்பாளர் இம்ரான் ராணா, சமூக வலைதளமான ட்விட்டரில் இன்று வெளியிட்ட செய்தியில், “வெவ்வேறு நகரங்களின் முக்கிய பகுதிகளில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது என்ற தகவல் எங்களுக்கு வந்துள்ளது. அது பற்றி நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்,” என தெரிவித்தார்.

தற்போது அந்நாட்டு அரசிடம் இருக்கும் வெளிநாட்டு பணத்தை வைத்து இரண்டு மாத காலத்துக்கும் குறைவான தேவையை பூர்த்தி செய்யும் அளவிலேயே இறக்குமதி செய்ய முடியும் என்பதால் பாகிஸ்தான் தற்போது அந்நிய செலாவணியை திரட்டுவதற்கான அவசரத் தேவையில் உள்ளது.

அரசின் கைவசம் இருக்கும் அந்நியச் செலாவணி இருப்பு மிகவும் வேகமாகத் தீர்ந்து வருவதால் இறக்குமதிச் செலவை கட்டுப்படுத்தவும், தற்போது இருக்கும் வெளிநாட்டுப் பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அரசு உள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்கான கடன் வழங்கும் விழாவில் உதயநிதி பங்கேற்பு

இந்தநிலையில் பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு அல்லாவே (இஸ்லாமியர்களின் இறைத்தூதர்) காரணம் என அந்நாட்டின் நிதித்துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘பாகிஸ்தான் எனும் நாட்டை அல்லா உருவாக்கி இருக்கும் பட்சத்தில், பொருளாதார நெருக்கடிக்கு அவரே கடமைபட்டுள்ளார். நாட்டை மேம்படுத்துவதும், முன்னேற்றுவதும் அல்லாவின் பணி.

நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வுக்கு கட்டணம்; ஏப்ரல் முதல் அமல்.!

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அல்லாவின் கருணையால் தற்போதைய இந்த அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகால டிராமா ஆட்சியின் விளைவுதான் இத்தகைய துன்பம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.