ஒரே இடத்தில் 1,200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு.. 5 வகை உணவுகளுடன் களைகட்டிய விருந்து..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஒரே இடத்தில் கர்ப்பிணிகள் ஆயிரத்து 200 பேருக்கு சமுதாய  வளைகாப்பு நடத்தப்பட்டது.

6 ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, கெலமங்களம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில், விமர்சையாக வளைகாப்பு நடத்தப்பட்டது.

கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, கண்ணாடி வளையல்கள், மஞ்சள், குங்குமம் சீர்வரிசையாக வழங்கப்பட்டு, ஏராளமான தின்பண்டங்களுடன் 5 வகை உணவுகள் பரிமாரப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.