இடைத்தேர்தல் அதிமுகவிற்கு புதிதல்ல: வெற்றி உறுதி – விஜயபாஸ்கர் நம்பிக்கை

இடைத்தேர்தல் அதிமுகவிற்கு புதிதல்ல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு வேகத்தடையாக அமையும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்திற்கும் பூத் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டையிpல் இருந்து செல்லும் அதிமுகவினர் எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் எந்தெந்த பகுதியில் வியூகம் எடுத்து பணியாற்ற வேண்டும் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
image
இதில் பேசிய விஜயபாஸ்கர்… நமக்கு இடைத்தேர்தல் புதிதல்ல. இடைத் தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றுவார்கள். அவ்வாறு புதுக்கோட்டையில் இருந்து செல்லும் அதிமுகவினர், எடப்பாடி பழனிசாமி யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
image
அதிமுக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. இந்த வெற்றி ஆளுங்கட்சி வேகத்திற்கு வேகத் தடையாக இருக்கும் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.