பல்கலை. நுழைவுத் தேர்வில் பங்கேற்க மாணவிகளுக்குத் தடை… தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவிகளை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என தாலிபான் அரசு மிரட்டல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாகாணங்களில் உள்ள தனியார் பல்கலைக்கழங்களுக்கு, அந்நாட்டு உயர் கல்வி அமைச்சகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில், மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கும் பல்கலைக்கழங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாலிபான்களின் இந்த அறிவிப்புக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.