வானில் பறந்துகொண்டிருந்தபோது எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சி – பயணி மீது வழக்குப்பதிவு..!

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் அவசர கால வழியை திறக்க முயன்ற பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இண்டிகோ 6E 5274 விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்பாக வானில் பறந்துகொண்டிருந்தபோது பயணி ஒருவர் அவசரகால வழியை திறக்க முயன்றுள்ளார். அதனை கவனித்த விமான ஊழியர்கள் பயணியை எச்சரித்தனர்.

விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட நிலையில், சம்பத்தப்பட்ட பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சத்திரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.