இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர் படகுகளை விடுவிக்க நடவடிக்கை: அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை

புதுடெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை மனு அளித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட செய்தியில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவை சந்தித்து கோரிக்கை மனு அளிததேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.