தேசிய கல்வி உதவி தொகை நிறுத்தம் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை அரசு காட்டுகிறது: ப.சிதம்பரம் சாடல்

புதுடெல்லி: சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகை நிறுத்தப்பட்டதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். மவுலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப் என்ற பெயரில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் முஸ்லிம், கிறிஸ்தவம், புத்தம், பார்சி, சீக்கியம், சமணம் என 6 சிறுபான்மை சமூகத்தினர் பயனடைந்தனர்.  இந்த உதவித்தொகை நிறுத்தப்படுவதாக கடந்த டிசம்பரில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார். இதற்கு  பல கட்சிகள்   கண்டனம் தெரிவித்தன. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிடுகையில், மவுலானா ஆசாத் நேஷனல் பெல்லோஷிப் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வழக்கப்பட்டு வந்த கல்வி கடனும்  அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு  அரசு சொல்லும் காரணம் முற்றிலும் பகுத்தறிவற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகை திட்டங்கள் இருப்பது உண்மைதான். ஆனால் அதனை காரணம் காட்டி சிறுபான்மையினரின் உதவி தொகை திட்டத்தை நிறுத்தி வைக்கப்படுமா என்ன? மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை போன்று பிஎம் கிஸான் திட்டமும் இருக்கிறது. இது போன்று ஏராளமான திட்டங்கள் உள்ளன. இதனால் சிறுபான்மையினர் மாணவர்களின் வாழ்வாதாரம் மேலும் சிக்கலாகும். சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை ஒன்றிய அரசு வெளிப்படையாக காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.