
ஓசூரில் விமான நிலையம் தொடங்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே. சிங், பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவில் வேறு விமான நிலையங்கள் அமையக்கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், ஒசூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக தெரிவித்தார்.
உடான் திட்டத்தின் கீழ், நெய்வேலி மற்றும் வேலூரில் விமான நிலையம் அமைப்பதற்கு லைசென்ஸ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க இந்திய விமானப்படை நிலம் வழங்க உள்ளதாகவும், ராமநாதபுரத்தில் மாநில அரசு நிலம் அளிக்க உள்ளதாகவும் வி.கே. சிங் தெரிவித்தார்.