டெல்லி செய்யும் லாபி; இறையன்பு டூ சிவதாஸ் மீனா… ஸ்டாலின் பிளான் சரி வருமா?

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குட்புக்கில் இருப்பவர் வெ.இறையன்பு ஐஏஎஸ். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலாளராக பதவி வகித்துள்ளார். அப்போது அவரது செயல்பாடுகளை வியந்து பார்த்து அப்படியே நட்பு ஏற்பட்டுள்ளது. இவரை சரியான நேரத்தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த ஸ்டாலின், தான் முதல்முறை முதல்வராக பதவியேற்றதும் தலைமை செயலாளராக நியமனம் செய்தார்.

இறையன்பு ஓய்வுஎன்ன தான் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தனது சொந்த மாநிலத்திற்கு விஸ்வாசமாக, முதல்வர் நினைப்பதை உடனே செய்து முடிக்கும் வல்லவராக திகழ்ந்தார். இவர் வரும் ஜூன் 16ஆம் தேதி ஓய்வு பெறுவது தான் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில் புதிய தலைமை செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். அவர் ஸ்டாலினுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.
புதிய தலைமை செயலாளர்ஆளுநர், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு தலை ஆட்டாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் இசைவிற்கு ஏற்ப செயல்பட வேண்டும். இவ்வளவு விஷயங்கள் இருப்பதால் தற்போதே ஆட்கள் தேர்வு தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம். இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பரிந்துரை பட்டியல் சிவதாஸ் மீனா, அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், ஹன்ஸ்ராஜ் வர்மா என நீண்டு கொண்டே செல்கிறது.
​​
சிவதாஸ் மீனா ஐஏஎஸ்இதில் சீனியர் ஐஏஎஸ் அதிகாரியான சிவதாஸ் மீனாவிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் அதிகாரி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்கு செயலாளர்களில் ஒருவராக இருந்தவர். அவரது மறைவிற்கு பின்னர் மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டார்.
ஸ்டாலின் ஆட்சிஅதன்பிறகு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் மீண்டும் மாநில பணிக்கு திரும்பினார். இவரை வைத்து டெல்லியில் லாபி செய்ய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயன்றதாக அப்போதே ஒரு பேச்சு உண்டு. அதேசமயம் மத்திய அரசுக்கு விஸ்வாசியாகவும் இருந்தவர். அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு குடைச்சல் கொடுப்பது போல் சிவதாஸ் மீனாவை வைத்தும் காய்களை நகர்த்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி லாபிஇதற்காக மத்திய அமைச்சர் ஒருவரே ரகசியமாக காய்களை நகர்த்தி வருவதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் ஸ்டாலின் அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டார். முழுவதும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தனக்குரிய அதிகாரியாக, தன்னுடைய உத்தரவுகளை நிறைவேற்றும் அதிகாரியாகவே வைத்திருப்பார் என்கின்றனர். வேண்டுமென்றால் ஆளுநர் அழைத்து சில விஷயங்களை கேட்டு பெற்று டெல்லிக்கு தகவல் கொடுக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

இறையன்புவிற்கு ஈடாகுமா?ஆனால் தமிழ்நாடு அரசின் கீழ் பல்வேறு துறை பொறுப்புகளை வகித்தவர். ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மாநில அரசுக்கு இணக்கமாகவே செயல்பட்டவர். இதுபோன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கின்றன. இருந்தாலும் இறையன்புவிற்கு இணையாக அரசு நிர்வாகத்தை கையாள்வாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக முன்வந்து நிற்கிறது. எனவே புதிய தலைமை செயலாளர் விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுமையாகவே முடிவெடுப்பார் என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.