மோடி- அதானி உறவு; கார்கே, நிர்மலா இடையே வெடித்த வாக்குவாதம்!

அமெரிக்கா நிறுவனமான ஹிண்டன்பெர்க், அதானி குழுமத்தின் மீது நிதி மோசடி குற்றசாட்டுகளை முன்வைத்த நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளன. முறையான விசாரணை வேண்டும் எனவும் தெடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்த மிக பெரிய ஊழலில் பொது மக்களின் பணம் சிக்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி மற்றும் எஸ்பிஐ போன்றவை அதானி குழும நிறுவனங்களில் முதலீடு மற்றும் கடன் கொடுத்தது மூலம் இந்த பிரச்சனை எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இன்று நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே; பிரதமர் எதற்கும் அஞ்சவில்லை எனில் அவர் ஏன், அதானி குழுமத்தின் மீது JPC விசாரணை செய்வதை பற்றி எதுவும் சொல்லாமல் தவிர்த்து வருகிறார். பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரின் சொத்து மதிப்பு ஒரு குறிப்பிட்ட காலத்தில் பல மடங்கு பெருகியுள்ளது. இது எவ்வாறு சாத்தியம் என தெரியவில்லை.

திரிபுரா தேர்தல்: பாஜக வியூகம்.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

அதாவது இரண்டரை ஆண்டுகளில் 13 முறை அதானி சொத்து மதிப்பு உயர்வு கண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் 50000 கோடியாக இருந்த சொத்து மதிப்பு, 2019 ஆம் ஆண்டில் 1 லட்சம் கோடியாக உயர்ந்தது. பிறகு 12 லட்சம் கோடி வரை அதானின் சொத்து மதிப்பு உயர்வதற்கு என்ன மந்திரம் நடந்ததென்று தெரியவில்லை என கார்கே பேசினார்.

கார்கேவின் உரைக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்; பிரதமர் மோடிக்கு எதிராக முற்றிலும் தவறான தகவல்களை உள்நோக்கத்துடன் பரப்பி வருகின்றனர். மேலும் பாரதத்தின் பிரதமரை வெளிப்படையாக அவமதித்து வருவதாக கூறினார்.

இதற்கு பதில் அளித்த கார்கே; நான் உண்மையை பேசினால் தேசத்திற்கு எதிரானவனா? மற்றவர்களை காட்டிலும் நான் தேசபக்தி உடையவன். நான் பூமியின் புதல்வன் என குறிப்பிட்டார்.

பியூஸ் கோயல் பேசுகையில்; கார்கே பேசுவதும் முற்றிலும் பங்கு சந்தையின் நிலவரம் குறித்து தான். இதில் அரசு தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இது குறித்து சரியான தகவல்களை முன்னாள் நிதி அமைச்சரிடம் கார்கே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி; பிரதமர் மோடியும் அதானியும் நெருங்கிய நண்பர்கள். மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போதில் இருந்தே அவர்களின் நட்பு வளர தொடங்கியது. இதனால் தான் அதானியின் தொழில்களும், சொத்து மதிப்பும் உயர்ந்ததாக குறிப்பிட்டார். இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் உறுதுணையாக செயல்பட்டு வருவதாகவும் ராகுல் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.