ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், எண்ணெய் தொழிற்சாலையின் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்ய இறங்கிய கூலித்தொழிலாளர்கள் 7 பேர், விஷவாயு தாக்கியதில் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
பெத்தாபுரம் அருகே கட்டுமானத்தில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில், தரைக்கு அடியில் புதைக்கப்பட்ட ஆயில் டேங்க்கை சுத்தம் செய்ய 7 தொழிலாளர்கள் உள்ளே இறங்கியுள்ளனர்.
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படும் டேங்கில், எண்ணெய் கசடுகளில் இருந்து விஷவாயு வெளியேறிய நிலையில், தொழிலாளர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் டேங்கினுள் இறங்கிய சிலர், தொழிலாளர்களை மீட்ட நிலையில், 7 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.