கனடாவில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தினுள் பேருந்து புகுந்து விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

கனடாவின் மாண்ட்ரீல் அருகேயுள்ள லாவல் நகரில், குழந்தைகள் பராமரிப்பு மையத்தினுள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பெற்றொர் தங்களது குழந்தைகளை பராமரிப்பு மையத்தில் விட்டுச் சென்ற நேரத்தில், அரசு பேருந்து ஒன்று பராமரிப்பு மையத்தினுள் புகுந்து விபத்துக்குள்ளானது.

கவனக்குறைவுடன் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.