ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் நாளை வெளியிடப்படவுள்ளது. அங்கப்பிரதட்சணத்துக்கான இலவச டிக்கெட்டுகளை நாளை ஆன்லைனில் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
