கத்தி கீழே கிடந்துச்சி அத எடுத்து யாருடையதுன்னு… பம்மிய அசால்ட் கைபுள்ள..!

பண்ருட்டி அருகே கையில் கத்தியை சுழற்றியபடி, இனிமே நாங்க தான் ரவுடி என்று பைக்கில் பந்தா காட்டிய இரு இளைஞர்களை ஊர் மக்கள் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சிறுகிராமம் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே இரு சக்கரவாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் கையில் கத்தியுடன், இனி நாங்க தான் ரவுடி ஓடுங்கடா … என்று உதார் விட்டபடி அதிவேகமாக சென்றனர்.

இதையடித்து உள்ளூர் மக்கள் இளைஞர்கள் பைக்கில் சுற்றி இரு இளைஞர்களையும் மடக்கிப்பிடித்து கத்திகளை பறித்து சோதனையிட்டனர். பாக்கெட்டில் மாவாவுடன் காணப்பட்ட இருவரின் அடாவடி குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த இருவரையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கத்திகளையும் பள்ளிக்கு எடுத்து ச்சென்ற கிராம மக்கள் அவர்களிடம் விசாரித்த போது கத்தி கீழே கிடந்ததாகவும் அதை எடுத்து யாருடையதுன்னு கேட்டதாகவும் சீரியசாக சமாளித்தான் அந்த கைப்புள்ள.

மற்றொருவன் மச்சானை பார்க்க வந்திருப்பதாக கூறினான்

பட்ட பகலில் அட்டகாசத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர்.

உளுந்தூர் பேட்டை காந்தளவாடியை சேர்ந்த திவான், முருகன் ஆகிய இருவரையும் ஆயுத தடுப்புச்சட்டத்தில் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.