வாழ்க்கையில் நம் கையில் எதுவும் இல்லை – பூஜா ஹெக்டே

தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. மூன்று மொழிகளில் முன்னணி நடிகை என்றாலும் கடந்தாண்டு இவருக்கு வெற்றியான ஆண்டாக அமையவில்லை. தமிழில் வெளியான பீஸ்ட், தெலுங்கில் வெளியான ராதே ஷ்யாம், ஹிந்தியில் வெளியான சர்க்கஸ் போன்ற படங்கள் வரவேற்பை பெறவில்லை. இது அவருக்கு வருத்தம் தான் என்றாலும் அதை பெரிதாக எடுக்காமல் நேர்மறையான சிந்தனையுடன் முன்னோக்கி செல்கிறார்.

தொடர் தோல்வி குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது : ‛‛வாழ்க்கையில் நம் கையில் எதுவும் இல்லை. நாம் எடுக்கும் முடிவுகள் சில சமயம் தோல்விகளை தரலாம். தவறு நடந்தால் அதற்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து திருத்திக் கொள்வேன். ஏனென்றால் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களால் தான் நான் இப்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். இனி கவனமுடன் படங்களை தேர்வு செய்வேன்'' என்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.