தேனி மாவட்டத்தில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(28). இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அ.வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த கயல்விழி (23) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவியிடையே குடும்பப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கயல்விழி கணவருடன் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்நிலையில் வாழ்க்கையில் வேறுபடைந்த கயல்விழி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கயல்விழியின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜெயமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.