Premgi Amaren:காஸ்ட்லி காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய பிரேம்ஜி: எவ்வளவு காஸ்ட்லி தெரியுமா?

Funny Viral video: இன்னும் சிங்கிளாகவே இருக்கும் பிரேம்ஜி அமரன் காதலர் தினத்தன்று யாருடன் மிங்கிள் ஆகியிருக்கிறார் என பாருங்கள்.

பிரேம்ஜி அமரன்நடிகரும், பாடகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனின் பெயரை சொன்னதுமே அவர் மொரட்டு சிங்கிளாச்சே என்று தான் ரசிகர்கள் கூறுவார்கள். தான் இப்படி மொரட்டு சிங்கிளாக இருப்பதை நினைத்து அவர் வெட்கப்படவில்லை. அதனாலேயே சிங்கிள்ஸ் எல்லோருக்கும் பிடித்த நபராக இருக்கிறார் பிரேம்ஜி அமரன். இந்நிலையில் தான் அவர் காதலர் தினத்தை கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
காதல்என்னாது, பிரேம்ஜி அமரனுக்கு காதலி கிடைத்துவிட்டாரா என்று பயங்கரமாக ஷாக் எல்லாம் ஆகக் கூடாது. அவருக்கு காதலி எல்லாம் கிடைக்கவில்லை. தனக்கு மிகவும் பிடித்த, தன்னை ஒருபோதும் கைவிடாத அந்த மதுவுடன் தான் காதலர் தினத்தை கொண்டாடியிருக்கிறார். யார் அந்த மது, முழுப் பெயர் என்னவென்று கேட்காதீர்கள். மது என்றால் மதுபானம் ஆகும்.

வீடியோகாதலர் தின ஸ்பெஷலாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி அமரன். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, காதலர் தின வாழ்த்துக்கள். எனக்கு தெரியும் உனக்கு 18 வயசு தான் ஆகுதுனு. ஆனால் ஐ லவ் யூ சோ மச். இன்னைக்கு உன்னை சாப்பிடாமல் விட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

காமெடி
கட்டிங்
அந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, எதிர்பார்த்தது மாதிரியே செய்துவிட்டீர்கள் மாம்ஸ். அந்த பொண்ணுக்கு 18 வயசு தான்னு சொல்றீங்க. பார்த்து, போலீஸ் வந்துவிடப் போகுது. எங்க வீட்டுக்கு வந்தீர்கள் என்றால் சேர்ந்து கட்டிங் போடலாம் மாம்ஸ். என் வழி தண்ணி வழி என இருக்கிறார் பிரேம்ஜி அமரன். என்ன கொடுமை சார் இது. உண்மையான குடிமகன் இவர் தான். 80ஸ், 90ஸ் கிட்ஸுகளுக்கு இந்த தண்ணி தான் துணை என தெரிவித்துள்ளனர்.
கலாய்
காஸ்ட்லிசமூக வலைதளவாசிகள் மேலும் கூறியிருப்பதாவது, நீங்கள் சாப்பிடாமல் விட மாட்டேன் என்று சொன்ன அந்த மது பாட்டிலின் விலை 8 ஆயிரத்து 534 ரூபாய் ஆகும். உங்களின் காதல் ரொம்ப காஸ்ட்லி தான் பிரேம்ஜி அமரன். ஒரு நைட்டுக்கே ரூ. 8 ஆயிரத்தை காலி செய்கிறீர்களே. பார்த்து குடிங்க. சொத்து எல்லாம் அழிந்துவிடப் போகுது என்கிறார்கள். பிரேம்ஜி அமரனுக்கு கல்யாணம் எப்பொழுது என்பது தான் ரசிகர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வியாகும். தவறாமல் கோவிலுக்கு செல்லும் பயபக்தியான பெண் கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வாராம் பிரேம்ஜி அமரன். அவர் எதிர்பார்க்கும்படியான பெண் இதுவரை கண்ணில்படவில்லையாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.