ரயில் சக்கரத்தில் தீ; வண்டியில் இருந்து குதித்த பயணிகள்.. மும்பையில் ஷாக்!

மஹாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் அசங்கான் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது மும்பையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தானேவின் கசரா பகுதில் இருந்து தெற்கு மும்பை பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பகுதியை நோக்கி இந்த ரயில் இன்று காலை 8.55 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் ரயிலின் சக்கரம் தீ பற்றி ஏறிய தொடங்கியது. ரயிலில் ஏற்பட்ட பிரேக் பிரச்சனை காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே தரப்பில் இருந்து தகவல் சொல்லப்படுகிறது.

ஓடும் ரயிலின் சக்கரத்தில் திடீரென தீ பற்றி எரிந்தததால், ரயிலுக்குள் இருந்த பயணிகள் மிகுந்த பயத்தில் இருந்து உள்ளனர். மேலும், வெளியில் ரயில்வே ஸ்டேஷனில் இருந்தவர்களும் செய்வதறியாது திகைத்துப்போய் நின்றுள்ளார்.

ரயிலின் சக்கரம் தீ பிடிக்கும் காட்சி மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இங்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது; ரயிலின் பிரேக், சக்கரத்துடன் உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 8.55 மணி முதல் 9. 07 மணிக்குள் நடந்தது எனவும் கூறப்படுகிறது.

திரிபுரா தேர்தல் விறுவிறு: 2023-ல் காத்திருக்கும் ட்விஸ்ட்- வியூகம் வகுத்த பாஜக சிஎம் மாணிக் சஹா!

இது போன்ற நேரங்களில் சில சமயம் புகை ஏற்படும் அல்லது நெருப்பு வருவதற்கான வாய்ப்புகள் இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் இழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். இது மக்கள் கூட்டம் அதிமாக இருக்கும் காலை நேரத்தில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே அதிகாரிகள் ரயிலை சோதனை செய்து சரியாக இயங்குகிறதா என சோதனை செய்த பிறகே அடுத்த பயணத்திற்கு ரயில் புறப்பட்டது எனவும் கூறினர். பரபரப்பான காலை நேரத்தில் அனைவரும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு என ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது இவ்வாறான சம்பவம் நடந்தது அங்கு இருந்தவர்களை மிகுந்த பரபரப்பில் ஆழ்த்தியது. இந்த வீடியோவை கண்ட பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

அதானி விஷயத்தில் செபி என்ன செய்கிறது? மத்திய அரசு அழுத்தமா? காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

பொது போக்குவரத்தில் அதிகப்படியான மக்கள் ரயிலை தேர்வு செய்து அன்றாடம் பயணம் செய்து வருகின்றனர். மற்ற போக்குவரத்துடன் பார்க்கும்போது ரயில் பயணம் சிறிது மலிவானதாக காணப்படுவதாலும், போக்குவரத்து நெரிசல் நிறைந்த சமயங்களில், சாலைகளை தவிர்த்து விரைவில் ஒரு இடத்திற்கு போக முடியும்.

இதனால் நேரம் பெரிய அலைச்சல் சேமிக்கப்படும் என்ற காரணத்தாலும் அதிக மக்களின் விருப்ப தேர்வாக ரயில் அமைந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில், ஓடும் ரயிலில் தீ பிடித்து எறிவது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் இதில் தொடர்பு உடையதால் அதிக கவனம் ஈர்க்கும் சம்பவமாகவும் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.