புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பரிந்துரையை ஏற்று வரும் 22-ஆம் தேதி (புதன்கிழமை) டெல்லி மேயர் தேர்தலை நடத்தலாம் என்று துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இதன்படி டெல்லி மேயர், துணை மேயர், மாநகராட்சி நிலைக்குழுவின் 6 உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 22-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. முன்னதாக, இன்று காலை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் ,மேயர் தேர்தல் தேதியை அவர் பரிந்துரைத்திருந்தார். அதனையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.