இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு அதிகரித்த மின்சார வாகனங்களின் விற்பனை.!

இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 28 விழுக்காடு அதிகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2022 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 248 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன என்றும் அவற்றில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் பேட்டரியில் இயங்கும் 9 வகையான இருசக்கர வாகனங்கள், 6 வகையான மூன்று சக்கர வாகனங்கள், 5 வகையான கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அவற்றுக்கான சார்ஜிங் பாயிண்ட்டுகள் அமைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.