பிரேசில் நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம்-நிலச்சரிவு.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு!

பிரேசிலின் சா-பாலோ பகுதியில் ஏற்பட்ட மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.

சூறைக்காற்று மற்றும் கனமழையால் வீடுகள் சேதமடைந்த நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமைடைந்துள்ளனர்.

சாலைகளை வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்திருப்பதால், மீட்புப் படையினர் சாலை மார்க்கமாகச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.