மாஜி அமைச்சர்களுக்கு சிக்கல்: ஸ்டாலின் கொடுத்த சிக்னல் – பாயத் தயாராகும் லஞ்ச ஒழிப்புத்துறை!

லஞ்ச ஒழிப்புத்துறை இனி நடத்தும் சோதனைகளின் முடிவில் கைது கண்டிப்பாக இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நசநசத்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்தி வந்தனர். அடுத்து எந்த அமைச்சர் வீட்டில் ரெய்டு நடக்கும் என்று தமிழக அரசியல் பரபரப்பாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரெய்டுகள் ஏதும் நடத்தப்படவில்லை. முன்னாள் அமைச்சர் ஒருவர் கூட லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு காரணமாக கைது செய்யப்படவில்லை.
முதல்வர் தரப்பிடமிருந்து உத்தரவு?திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும், ஊழல் செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன, ஆட்சிக்கு வந்ததும் கைது செய்யப்படுவார்கள் என திமுக தரப்பு கூறி வந்தது. ஆனால் ரெய்டை தவிர வேறெதுவும் நடந்திடாத நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதல்வர் தரப்பிடமிருந்து முக்கிய உத்தரவுகள் சென்றுள்ளதாக சொல்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்!அந்த வகையில் இரு முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் டிக் அடிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். மின்சாரத்துறையில் நிலக்கரி கொள்முதல் செய்த விவகாரத்தில் கப்பலில் இருந்து இறக்கி ஏற்றும் தொழிலாளர்கள் செலவு கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக ஆறு பொறியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
10 பேர் மீது வழக்கு பதிவு!இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து மின்சார வாரிய நிர்வாகம் 2011 – 2016ஆம் ஆண்டு வரை 908 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரிய பொறியாளர்கள், தனியார் நிறுவன நிர்வாகிகள் என 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நத்தம் விஸ்வநாதன் – சிக்குவாரா?​​
அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரத்துறை அமைச்சர்களாக 2011-16 காலகட்டத்தில் நத்தம் விஸ்வநாதனும், 2016-21 காலகட்டத்தில் தங்கமணியும் பதவி வகித்தனர். தங்கமணி வீட்டில் ஏற்கெனவே சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் நடைபெறலாம் என்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் இடங்களிலும் சோதனை நடைபெறலாம் என்றும் கூறுகிறார்கள்.இந்த முறை கைது வரை செல்ல வேண்டும் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதால் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு உருவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.