வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 21-ம் தேதி பாரத் கவுரவ் ரயில் சேவை துவங்குகிறது.
‘பாரத் தர்ஷன்’ சுற்றுலா ரயில் திட்டம், கடந்த மார்ச்சில் நிறுத்தப்பட்டது. அதற்கு மாற்றாக, பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் சேவை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் 21-ம் தேதி முதல் பாரத் கவுரவ் ரயில் சேவை துவங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.டில்லி சபர்தர்ஜூங் ரயில் நிலையத்திலிருந்து அசாம், அருணாசலபிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்கள் வழியாக அந்த ரயில் செல்கிறது. இவ்வாறு அவை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement