தீவிரமடையும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று – இந்தியாவில் முதல் மரணம் பதிவு


இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக, இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முதல் மரணம் கர்நாடக மாநிலத்திலும், 2 ஆவது மரணம் அரியானா மாநிலத்திலும் பதிவாகியுள்ளன.

ஹாங்காங் காய்ச்சல் என்றும் அழைக்கப்படும், இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 வைரஸால் பாதிக்கப்பட்ட 90 பேர் கடந்த காலங்களில் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர்.

தீவிரமடையும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று - இந்தியாவில் முதல் மரணம் பதிவு | Influenza First Death In India

நோய் அறிகுறிகள்

இந்த இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கோவிட் அறிகுறிகளுடன் பல ஒற்றுமைகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தீவிரமடையும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று - இந்தியாவில் முதல் மரணம் பதிவு | Influenza First Death In India

மேலும் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை புண், சுவாச பிரச்சினைகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளையும் காட்டுகின்றன.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் முறையான சிகிச்சை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.