வடமாநிலத்தவர் சர்ச்சை..பிரசாந்த் கிஷோர் ட்வீட்..சீமானை சீண்டிய முன்னாள் தம்பி.!

வடமாநிலத்தவர் விவகாரத்தில் வாய் சொல் வீரன்
சீமான்
சொல்வது போல் தமிழ்நாட்டு மக்கள் இல்லை என திமுகவின் ராஜிவ் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தி பேசியதற்காக தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாகவும், எரிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் போலி செய்தி பரவியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் அது பாஜகவினரால் பரபரப்பட்ட போலி செய்தி என்பது விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் சமூக வலைதளங்களில் போலி செய்திகள் நீக்கப்படவில்லை.

அதேபோல் இன்னமும் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பாஜக ஆதரவு இந்துத்துவவாதிகள் போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். அதேபோல் போலி செய்திகளை பரப்பிய நபர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. போலி செய்தி பரப்பியதில் முக்கிய நபரான உத்தரபிரதேச பாஜ செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது பிணையில் வர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவரைப் பிடிக்க திருச்செந்தூர் தனிப்படை டெல்லி விரைந்தது. ஆனால் தெரியாமல் வதந்திகளை பரப்பியதாக கூறி அவர் டெல்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அவரை தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ்நாட்டைப் பற்றி அவதூறு பரப்புவதற்காக பாஜக செய்யும் பக்கா பிளான் இது என்பது அம்பலமானது. ஏனெனில் முன்னதாக கடந்த மார்ச் 1ம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என முக ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் முடிவு எடுக்கப்பட்டது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், இந்தி பேசும் வாக்களர்களை கவரவும், அகில இந்திய அளவில் தமிழகத்தை தனிமைப்படுத்தவும் பாஜக போலி செய்திகளை பரப்பியது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோ வைரலானது. அதில் ‘நான் ஆட்சிக்கு வந்தால் இந்தி பேசும் தொழிலாளர்கள் மீது கஞ்சா கேஸ் போடுவேன், ரேப் கேஸ் போடுவேன், ஓட ஓட விரட்டுவேன், அவர்களே வெளியேறும்படி செய்வேன்’ என பேசி இருந்தார்.

அந்த வீடியோவை மேற்கோள்காட்டி பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஐபேக் நிறுவனத்தின் தலைவருமான பிரசாந்த் கிஷோர், ‘‘வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களை பரப்பிய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? ” என ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில் பிரசாந்த் கிஷோரின் ட்வீட்டிற்கு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘குடிதேஷ் கோமாளி சீமான், வாயில் வந்ததை எல்லாம் பேசும் வாய் சொல்வீரன்!. பிரசாந்த் கிஷோர் அவர்களே! அந்த பிழைப்புவாதி போல் இல்லை தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டு அரசும்!. எங்கள் மீது திணிக்கபடும் இந்தியை தான் நாங்கள் என்றும் எதிர்க்கிறோம்! இந்தி பேசும் மக்களை அல்ல!’’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.