சோத்துப்பாறை அணையிலிருந்து மாசு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் வராகநதி ஆற்று நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்: பொதுப்பணித்துறை அறிவிப்பு

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையின் நீர் மாசடைந்து விட்டதாகவும், அதனால், வண்டல் கலந்த மாசடைந்த நீர் வராக நதி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால், பொதுமக்கள் ஆற்று நீரை பயன்படுத்த வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சோத்துப்பாறை அணையில் வளர்க்கப்பட்டு வரும் மீன்களை பிடிப்பதற்காக தண்ணீரைத் திறந்து விட்டு, செயற்கையாக குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டிய பாஜகவினர் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோத்துப்பாறை அணை தண்ணீரை மாசுப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.