சென்னை: சென்னை தியாகராயநகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சென்னை தியாகராயநகரில் பத்மாவதி தாயாா் கோயில் கட்டுவது என தேவஸ்தானம் சாா்பில் முடிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2020 பிப்ரவரியில் ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, நாளை (வெள்ளிக்கிழமை(மாா்ச் 17) கும்பாபிஷேகம் […]