திமுக எம்.பி. திருச்சி சிவாவுடன், அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு..!

திமுக எம்பி திருச்சி சிவாவின் வீட்டின் மீது அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அமைச்சர் நேரு இன்று சிவாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

கடந்த புதன்கிழமையன்று கே.என்.நேரு பங்கேற்ற இறகுப்பந்து அரங்கு திறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழில், சிவாவின் பெயர் இடம்பெறாதது குறித்து இருதரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், திருச்சி ராஜா காலனியில் சிவாவின் வீட்டிற்கு சென்ற அமைச்சர், நடந்த நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பேட்டியளித்த கே.என்.நேரு, நடக்க கூடாத விஷயங்கள் நடைபெற்றதாகவும், திருச்சி சிவாவை சமாதானப்படுத்துமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியதை அடுத்து அவரை சந்தித்ததாகவும் கூறினார்.

பின்னர் பேசிய திருச்சி சிவா, நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் என்றும், நடப்பவை நல்லதாகவே இருக்கட்டும் என்றும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.