பாதயாத்திரையின் போது ராகுல்காந்தியிடம் 2 பெண்கள் அளித்த புகார்.. பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி விவரம் கேட்கும் போலீசார்..!

ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

பாரத ஒற்றுமை பாதயாத்திரையின் போது பேசிய ராகுல் காந்தி “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்” என்று கூறியிருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை ராகுலிடம் போலீசார் கேட்டுள்ளனர், இதனால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகளை தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மற்றும் அதானியின் உறவு குறித்த ராகுல் காந்தியின் கேள்விகளால் திணறிய மத்திய அரசு காவல்துறைக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.ராகுல் காந்தி தொடர்பான படங்களே போதுமான சான்றுகள் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.