
உத்தரபிரதேசம் வாரணாசியில் நடிகை ஆகான்ஷா துபே ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நடிகை உயிரிழப்பதற்கு முன்னதாக அவருடன் சந்தீப் சிங் என்பவர் ஹோட்டலுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அந்நபர் துபேவுடன் ஹோட்டலில் 17 நிமிடங்கள் இருந்ததும், பிறகு காரில் புறப்பட்டு செல்வதும் தெரியவந்துள்ளது. தற்போது இதுபற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.