2024 மக்களவை தேர்தல்: ‘அதென்ன உயர்சாதி ஏழைகள்.?’ – முதல்வர் ஸ்டாலின் சரவெடி..!

‘பி’ டீம்

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் மாநாடு, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஹைப்ரிட் முறையில் (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) இன்று மாலை நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் உள்ள 20 எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பாஜகவின் பி டீம் என கருதப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலங்கான முதல்வர் சந்திரசேகரராவ் ஆகியோர் சார்பாக அக்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மூன்றாம் கூட்டணி

மேற்கூறிய மூன்று முதல்வர்களும் காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாம் கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் மூன்றாவதாக கூட்டணி என்று ஒன்று அமைந்தால் அது பாஜகவிற்கு சாதமாகவே அமையும் என்பது அரசியல் நோக்கர்கள், கருத்து கணிப்புகள் மற்றும் முக

உள்ளிட்டோரின் கருத்தாக உள்ளது.

சமூக நீதி

அதேபோல் வருகின்ற 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக எதிர்கட்சிகளின் ஒற்றுமையை கோறும் தேசிய மாநாடாகவே இது கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றும் போது, ‘‘ஒட்டுமொத்த இந்தியாவையும் இணையத்தால் இணைத்துள்ளோம். சமூகநீதி நம்மை இணைத்துள்ளது. சமூகநீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு தரப்பட வேண்டும் என்பதே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரையறை. ஆனால் உயர்சாதி ஏழைகள் என்று கூறி இடஒதுக்கீடு தருகிறது ஒன்றிய பாஜக அரசு, இது சமூகநீதி அல்ல. ஏழைகளுக்கு எந்த பொருளாதார உதவி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கப்படும் இந்த இடஒதுக்கீடு பொருளாதார நீதியே ஆகுமே தவிர சமூகநீதி ஆகாது.

உயர்சாதி ஏழைகள்

ஏழைகள் என்றால் அனைத்து ஏழைகள் தானே இருக்க முடியும். அதில் என்ன உயர்சாதி ஏழைகள்? ஒடுக்கப்பட்ட சாதி ஏழைகளை புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா? அதனால் தான் பொருளாதார அளவுகோளை இடஒதுக்கீட்டில் நாங்கள் எதிர்க்கிறோம். உயர்சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது ஒன்றிய பாஜக அரசின் திட்டம்.

இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி, திறமைபொய்விட்டது என்று கூறி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். இந்த வன்மமான எண்ணத்திற்கு அதிகம் விளக்கம் கூற தேவையில்லை. பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும்.

நமக்கான கடமை

நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமூக நீதிக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும். இடஒதுக்கீட்டை தேசிய, மாநில அளவில் கண்காணிக்க வேண்டும். சமூகநீதியை காக்கும் கடமை நமக்குத்தான் உள்ளது. அதனால்தான் இணைந்துள்ளோம்; புறக்கணிக்கப்பட்டோரை கைத்தூக்கி விடுவதுதான் சமூகநீதி’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு

அதேபோல் இந்த மாநாட்டில் பேசிய அனைத்து தலைவர்களும், சாதிவாரி கணக்கெடுப்பை கோரினர். திரிணாமுல் எம்பி டெரிக் ஒ பிரைன் பேசுகையில், ‘‘இது ஒரு அரசியல் முன்னெடுப்பு என்பதில் இருந்து நாம் பின்வாங்கக் கூடாது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் இதுபோன்ற மாநாட்டில் இணைய வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று கட்சிகள் பாஜகவை எதிர்த்துப் போராட விரும்பவில்லை. இது சாம்பல் நிறமாக இருக்கும் நேரம் அல்ல. இது கருப்பு அல்லது வெள்ளையாக இருக்கும் நேரம். நமக்கு ஒரு பணி உள்ளது. நாம் ஒன்றிணைய வேண்டும் என்று நான் நவீன் பட்நாயக்கிடமும், ஜெகன் மோகனிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.