கே.ஜி.எப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் – படக்குழு அறிவிப்பு..!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்து வெளியான கே.ஜி.எப். முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் 2-ம் பாகம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை படக்குழு நினைவு கூர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் 1978-81 வரை ராக்கி எங்கே இருந்தார்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதனால் கேஜிஎப் 3 பட கதை 1978-81 காலக்கட்டங்களில் நடக்கும் படமாக உருவாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதையடுத்து மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கே.ஜி.எப்., ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். தற்போது 3-ம் பாகத்திற்கான திரைக்கதைப் பணியில் பிரசாந்த் நீல் ஈடுபட்டுள்ளார்.

தற்போது பிரபாஸின் ‘சலார்‘ படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். இந்த பட பணிகள் முடிந்ததும் கே.ஜி.எப் 3 பட பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.