அன்புமணி: ‘ஏன் அங்க மட்டும் இது நடந்துகிட்டே இருக்குது’.. உடனே நடவடிக்கை எடுங்க.!

பல்கலைக்கழக ஊழலுக்கு எதிராக போராடும் ஆசிரியர் சங்கத் தலைவரை பழிவாங்க முயலுவதா? பதிவாளரை நீக்க வேண்டும் என

தலைவர் அன்புமணி

தெரிவித்துள்ளார்.

நொய்யலாறு மீட்பு கருத்துரையாடல் சௌமியா அன்புமணி பங்கேற்பு

சேலத்தில் இயங்கி வரும் பெரியார் பல்கலைகழகம் எப்போது சர்ச்சைகளுக்கு பெயர் போனது. கடந்த முறை உரிய ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படாமல், 2023-24ஆம் கல்வியாண்டில் தனியார் மூலம் நடத்தப்படும் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) என்ற புதிய பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட இருந்தநிலையில், அதை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக எதிர்த்தார்.

‘‘சேலம் பெரியார் பல்கலைக்கழகமும், ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இந்த 4 ஆண்டு தொழில்நுட்ப படிப்பை வழங்கவிருக்கின்றன. ஆனால், இத்தகையப் படிப்பை வழங்க பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தகுதி உண்டா? இந்தப் படிப்புக்கு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? இந்தப் படிப்பு பட்டமேற்படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் தகுதியானது என்று ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா?’’ என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த சூழலில் மேலும் ஒரு சர்ச்சையில் பெரியார் பல்கலைகழகம் சிக்கியுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய அறவழிப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியநாதன் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது? என்று விளக்கமளிக்கக் கோரி அவருக்கு பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் தங்கவேலு குறிப்பாணை அனுப்பியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழக பேராசிரியர் என்ற முறையில் வைத்தியநாதன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை; பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டுள்ளார். தொழிற்சங்க விதிகள் மற்றும் உரிமைகளின்படி இதில் எந்த தவறும் இல்லை. இதை அறிந்திருந்தும் அவருக்கு குறிப்பாணை அனுப்புவது அப்பட்டமான பழிவாங்கும் செயல்!

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசே விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. அந்த விசாரணைக் குழு முன் அரசுத் தரப்புசாட்சியாக பேராசிரியர் வைத்தியநாதன் சாட்சியளிக்க உள்ளார். அதைத் தடுக்கும் நோக்குடன் அச்சுறுத்துவதற்காகவே அவருக்கு குறிப்பாணை வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தமிழக அரசால் பட்டியலிடப்பட்டுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழல் மற்றும் முறைகேடுகளில் பேராசிரியர் தங்கவேலு சம்பந்தப்பட்டுள்ளார். அப்படிப்பட்டவரை பொறுப்பு பதிவாளராக நியமித்தது தவறு. அவரது பழி வாங்கலை அனுமதிப்பது அதைவிட பெரும் தவறு. எனவே பேராசிரியர் வைத்தியநாதனுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணையை திரும்பப் பெறவும் பழிவாங்கும் நோக்கில் செயல்படும் பேராசிரியர் தங்கவேலுவை பதிவாளர் பொறுப்பிலிருந்து நீக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.