பொன்முடிக்கு நாளைய தினம் ரொம்ப முக்கியம்.. பரபரப்பு வழக்கில் முக்கிய தீர்ப்பு.. உச்சக்கட்ட பதற்றம்

சென்னை:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு நாளைய தினம் மிக முக்கியமானது ஆகும். அவருக்கு எதிரான வழக்கு ஒன்றில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ளது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை

உற்று கவனித்து வருகிறது.

கடந்த 1996 – 2001-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் பொன்முடி அமைச்சராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சைதாப்பேட்டையில் 3,360 சதுர அடி நிலத்தை போலி ஆவணம் மூலமாக கைப்பற்றி தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த இடத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டிடமும் கட்டப்பட்டது.

இதுதொடர்பாக நில உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் பொன்முடி, மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார் பதிவாளர் புருபாபு, சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை எம்பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த வழக்கு விசாரணையின் போது பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சைதை கிட்டு, சார் பதிவாளர் புருபாபு ஆகியோர் உயிரிழந்தனர். 90-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் அரசு தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நாளைய தினம் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுகிறது. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முக்கிய வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதால் திமுக வட்டாரத்திலும், தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.