3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்… யமுனையில் வரலாறு காணாத வெள்ளம்… டெல்லியில் 144 தடை!

தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களை வச்சு செய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் என பல மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் கொட்டிய கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பல அம்மாநிலமே உருக்குலைந்துள்ளது. சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் முற்றிலும் சேதமைந்துள்ளன.

ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழைக்கு இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் பீகார், மேகாலயா, மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மிகக் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது… வீடியோ வெளியிட்ட பாஜக!

மேலும் பீகார், அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் சில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றில் இன்று 207.55 மீட்டர் உயரம் வரை தண்ணீர் ஆர்பரித்து ஓடுகிறது. இது 1978 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட 207.49 மீட்டர் என்ற வரலாறு காணாத அளவில் ஆபத்தான நிலையில் உள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த அதிரடி… 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலை!

யமுனை ஆறு அபாய கட்டத்தை தாண்டியுள்ளதால் யமுனை கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யமுனை ஆறு பாயும் பகுதிகளில் டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. யமுனை ஆறு மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை மக்கள் சுற்றுலா தளங்களை போல் குடும்பத்துடன் வந்து செல்பி எடுத்தனர்.

ஆபத்தை உணராமல் யமுனை ஆற்று பகுதியில் மக்கள் கூட்டம் கூடியதை தொடர்ந்து இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யமுனை ஆறு இன்னும் சில மீட்டரை எட்டினால் முக்கிய பகுதிகளுக்குள் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு… என்னன்னு பாருங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.