உத்தரகாண்ட் மின்மாற்றி வெடித்து சிதறியதில் 10 பேர் பலி… பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் சாமேலி மாவட்டத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றங்கரை பகுதியில் மின்மாற்றி வெடித்து சிதறியதில் 10 பேர் பலியான கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள சாமேலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றுப் பகுதியில் நம்மை கங்கை நீர்மின்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்த மின்மாற்றியில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென வெடித்து சிதறியது.

இதில் பணியில் ஈடுபட்டிருந்த 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் படுகாயம் அடைந்த 14 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவருமே நீர்மின் திட்ட பணியில் ஈடுட்டிருந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் தாமி இந்த விபத்து குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி தெரிவித்துள்ளார். நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த 10 தொழிலாளர்கள் மின்மாற்றி வெடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.