ஃபாரின் பார் போல ஜொளிக்க போகும் டாஸ்மாக்… பக்கா டிஜிட்டல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து கூடுதலாக வசூலித்தால் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகு டாஸ்மாக் எலைட் கடைகளில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு இறக்குமதி மது வகைகளின் விலையும் 10 ரூபாய் முதல் 320 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது.

இதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் மது விலையை உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை புதிய பொலிவுடன் நவீனமாக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் 5 மண்டலங்களாகவும், 38 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டதாக ஒரு மாவட்டத்திற்கு 5 கடைகள் வீதம் 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மது பிரியர்களை கவரும் வகையில் மின்னொளியில் மதுக்கடைகளை அழகுப்படுத்தவும் மது வகைகளின் விலையை டிஜிட்டல் போர்டில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.