தமிழகத்தில் வறட்சியான பகுதிகள் எவை? அரசிதழில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!

தமிழகம் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரண்டு விதமான மழையை பெரிதும் நம்பியிருக்கிறது. இதுதவிர வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளிட்டவை அவ்வப்போது நல்ல மழையை வாரி வழங்கி செல்கிறது.

வறட்சி நிவாரண நிதி; கோரிக்கையை செவி சாய்க்குமா அரசு?

பருவமழை பொய்த்ததால் ஏமாற்றம்

மழை பொய்க்கும் போது விவசாயம் ஆபத்தின் பிடியில் சிக்கும். மக்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பர். அரசு பல விதங்களில் சிக்கலை சந்திக்கும். எனவே தான் நீர் மேலாண்மையில் அரசு தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

வேளாண் வறட்சி பகுதிகள் அறிவிப்பு

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு மழைப்பொழிவு குறைந்த காரணத்தால் வேளாண் வறட்சி பகுதிகளாக அடையாளம் காணப்பட்டவை குறித்து தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக இடம்பெற்றுள்ளன.

எந்தெந்த மாவட்டங்களில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணல்மேல்குடி ஆகிய வட்டங்கள்சிவகங்கை மாவட்டத்தில் தேவக்கோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை ஆகிய வட்டங்கள்ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, போகலூர், கடலாடி, மண்டபம், நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை ஆகிய வட்டங்கள்தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையநல்லூர், கீழ்ப்பாவூர், மேலநீலிதநல்லூர் ஆகிய வட்டங்கள்தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி வட்டம்விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி ஆகிய வட்டங்கள்

அரசு இழப்பீடு வழங்குமா?

இவ்வாறு வறட்சி நிலவும் பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டியது அவசியம். வெற்று அறிவிப்புகளால் எதுவும் மாறிவிடாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இனிவரும் காலங்களில் வறட்சியை சமாளிக்கும் வகையில் செயல் திட்டங்கள் உருவாக்க வேண்டும், அதை சரியான முறையில் செயல்படுத்தி விவசாயிகள் துயரப் படாமல் காக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.