தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வியும், சுகாதாரமும் தனது ஆட்சியின் இரு கண்கள் எனக் கூறும் முதல்வர் ஸ்டாலின், பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கல்வி உதவித் தொகை!
இந்நிலையில் 2023-2024ஆம் நிதி ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக் கோரிக்கையின்போது மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டு 1 மணி நேரத்தில் 1 லட்சம் சூரிய நமஸ்காரம் செய்து சாதனை
தற்போது இது அமலுக்கு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “மாற்றுத் திறன் மாணவர்களின் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி,
1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1,000 என்பதை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.6ஆம் முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,000 என்பதனை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4000 என்பதனை ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6,000 என்பதனை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.முதுகலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7,000 என்பதனை ரூ.14,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்பிப்பது எப்படி?
இதனால் சிறப்புக்கல்வி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிலையினை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் பரிசீலனை செய்யப்பட்ட பின்னர் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.