அடித்து கொளுத்த போகும் கனமழை.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. திடீர் அறிவிப்பு

புதுச்சேரி:
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், புதுச்சேரியின் மாஹே பகுதியில் உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு மட்டும் நாளை (ஜூலை 24) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி உள்ளதை அடுத்து, அம்மாநிலத்தில் பேய் மழை கொட்டி வருகிறது. இந்த பருவமழை தற்போது தமிழகம், புதுச்சேரியிலும் ஒரு காட்டு காட்டி வருகிறது. ஒரு நாள் வெயில், ஒரு நாள் மழை என குற்றால சீசன் போல தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வானிலை நிலவுகிறது. இந்த சூழலில், நாளை கேரளாவில் பல பகுதிகளில் பலத்த மழை கொட்ட போவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதில் மாஹே பிராந்தியமும் உண்டு.

இனி தக்காளிக்கு பதிலாக ஆப்பிளை பயன்படுத்தலாம்.. எடப்பாடி பழனிசாமி புது ஐடியா

மாஹே என்பது கேரளாவில் உள்ள போதிலும், அதனை நிர்வாகம் செய்வது புதுச்சேரி அரசாங்கம் தான். எனவே,
கனமழை
எச்சரிக்கை இருப்பதால் மாஹேவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை அளித்து புதுச்சேரி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.