நடுக்கடலில் பற்றி எரிந்த 3,000 கார்கள்… களேபரமான சரக்கு கப்பல்… அதிர்ந்த வட கடல்!

நெதர்லாந்து நாட்டின் வடக்கே வட கடல் காணப்படுகிறது. இதில் ஃபிரிமேண்டில் ஹைவே (Fremantle Highway) என்ற சரக்கு கப்பல் பயணம் மேற்கொண்டது. அதாவது ஜெர்மனி நாட்டின் பிரேமெர்ஹாவென் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

ஆண்டிப்பட்டியில் பழைய இரும்பு கடையில் பயங்கர தீவிபத்து!

அமிலாந்து அருகே தீவிபத்து

இந்நிலையில் நெதர்லாந்து தீவுகளில் ஒன்றான அமிலாந்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் சரக்கு கப்பல் சென்ற போது திடீரென தீப்பற்றிக் கொண்டது. அதில் 3,000க்கும் மேற்பட்ட கார்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 25 எலக்ட்ரிக் கார்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதென்ன ஜப்பானுக்கு வந்த சோதனை? அதுவும் 14 வருஷமா… நொந்து நூடுல்ஸ் ஆன அரசு!

பற்றி எரியும் சரக்கு கப்பல்

தீவிபத்தில் அனைத்து கார்களும் எரிந்து சேதமடைந்துள்ளன. தீ தொடர்ச்சியாக எரிந்து வருவதால் அப்பகுதியில் கரும்புகையாக காட்சி அளிக்கிறது. கப்பலே தெரியாத அளவிற்கு புகை விண்ணை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் கப்பல் ஊழியர் ஒருவர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.

தீயை அணைக்க மும்முரம்

எஞ்சிய 23 ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தீவிபத்து குறித்து தகவலறிந்து ஹெலிகாப்டர்களும், படகுகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையில் காயமடைந்த ஊழியர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஊழியர்கள் காயங்கள் உடன் தப்பினர்

சிலர் கடலில் குதித்து உயிர் காக்கும் படகுகள் மூலம் தப்பினர். தற்போது இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இவை தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. பல மணி நேரமாக போராடி வரும் இவர்கள், தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் ஆசிரியராக சூப்பர் சான்ஸ்… இன்னும் 6 நாட்கள் தான் டைம்!

ஆபத்தில் வாடென் கடற்பகுதி

இதில் மற்றொரு பெரிய பிரச்சினையும் இருக்கிறது. தீவிபத்து நடந்துள்ள இடத்திற்கு அருகில் தான் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா தலமான வாடென் கடற்பகுதி அமைந்துள்ளது. மேலும் புலம்பெயர் பறவைகள் தங்குவதற்கான பகுதியும் இருக்கிறது.

பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு

இவை கரும்புகையால் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சரக்கு கப்பல் விபத்தால் கடலில் எண்ணெய் மாசு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தற்போது வரை அப்படி எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. விரைவாக தீயை அணைக்காவிடில் பாதிப்புகள் அதிகரிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.