ரெட் அலர்ட்… கொட்டித்தீர்க்கும் மழை… பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

மும்பையில் கனமழை காரணமாக நேற்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை முதலே பலத்த மழை பெய்து வந்தது. நேறு காலை 8 மணியில் இருந்து நேற்று இரவு 10 மணி வரை 11 சென்டி மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. மேலும் நேற்று இரவு முதல் இன்றும் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் மும்பை மாநகருக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்.. பாதையில் வரும் மெகா மாற்றங்கள்.. மாஸ்டர் பிளான்!

மும்பை பல்கலைக்கழகம் நகரம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மும்பையில் இன்று பகல் வரை பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கொட்டும் மழையால் மும்பையில் சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாக்பூரில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால் நரேந்திர நகர் ரயில்வே சுரங்கப்பாதை மற்றும் விமான நிலைய சாலை மூடப்பட்டுள்ளது.

அப்பப்பா…. அம்மா நடிப்பில் அசர வைக்கும் சரண்யா பொன்வண்ணனா இது…

சந்திராபூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 5 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 7 பெண்கள் காயமடைந்துள்ளனர். இதேபோல் ராய்காட், ரத்னகிரி ஆகிய மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.